நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

வெளியூர் மரண அறிவிப்பு

நமதூர் பெரியப்பள்ளிவாசல் தெரு பாப்பு ஹஜ்ரத் அவர்களின் மகளும் அப்துல் மாலிக், முஹம்மது மன்சூர், முஹம்மது அத்ஹர் ஆகியோரின் சகோதரியும் ஆகிய பல்கீஸம்மா அவர்கள் இன்று 02-09-2010 வியாழக்கிழமை காலை வழுத்தூரில் இறையடிசேர்ந்தார்கள். இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

0 comments:

கருத்துரையிடுக