நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

மேலத்திருப்பூந்துருத்தி இளைஞர்... சர்வதேச நடுவர்!

மேலத்திருப்பூந்துருத்தி இளைஞர்... சர்வதேச நடுவர்! ரமேஷ்குமார்... சர்வதேச அரங்கில் காலடி வைத்திருக்கும் தஞ்சாவூர் தமிழன். கடந்த வருடம் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேஸ்கட் பால் விளையாட்டின் நடுவர் இவர்தான். அதற்கு முன்னும் பின்னும் சர்வதேசப் போட்டிகளுக்கு நடுவராகப் பல நாடுகளுக்கும் பறக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி கிராமத்தில் ரமேஷ்குமாரைச் சந்திக்கப்போனால், அமைதியாக வரவேற்கிறது சர்வதேசக் கூடைப்பந்து நடுவரின் இல்லம். 

பள்ளிக்கூட நாட்களில் கிரிக்கெட்’ மீதுதான் ஆர்வம் இருந்தது. ஆனால், முழுமையான மனநிறைவு அதில் இல்லை. உடற்கல்வியில் பி.எஸ்சி., பி.பி.எட்., எம்.பி.எட்., சி.எஃப்.சி, பி.ஜி.டி.எஸ்.எம்., எம்.பில். படித்திருக்கிறேன். வாலிபால், கிரிக்கெட், ஃபுட்பால்... இப்படி எல்லா விளையாட்டுகளிலும் மாநில அளவில் விளையாடியிருக்கிறேன். கேப்டனாகவும் இருந்திருக்கிறேன். ஆனால், எனது அதிகபட்சத் திறமை வெளிப்படக்கூடிய ஒரு துறையைக் கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. எனது நண்பர்கள் பெருமாள் மற்றும் பிரபாகரன் ஆகியோர்தான் எனக்கு பேஸ்கட்பால் விளையாட்டை அறிமுகம் செய்தனர். விதிமுறைகள், பயிற்சிகள் என ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டேன். பகுதி நேர வேலையாக தஞ்சாவூர் பள்ளிகள் சிலவற்றில் கைப்பந்து, பேட் மிட்டன், கோ-கோ, கூடைப்பந்து போன்ற விளை யாட்டுகளில் பயிற்சியாளராகவும் இருந்தேன். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே விளையாட்டுத் துறையைப்பற்றி விரிவான, முழுமை யான விழிப்பு உணர்வு இல்லை. 

விளையாட்டு வீரர், கோச் என்பதைத் தாண்டி, நடுவர் என்ற வேலையை யாரும் கண்டு கொள்ளவில்லை. நான் நடுவரைக் குறிவைத்து நகர்ந்தேன். 1996-ம் ஆண்டு, முதல்முறையாக மாநில கோ-கோ நடுவராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு, மாநில அளவிலான அத்லெடிக், கபடி, கைப்பந்து நடுவராகப் பல போட்டிகளில் செயல்பட்டு இருக்கிறேன். 2001-ம் ஆண்டில்தான் கூடைப்பந்து நடுவராகத் தேர்ச்சி பெற்றேன். சர்வதேச நடுவர் பணி 2006-ல் தொடங்கியது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்த நடுவர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று, மலேசியாவில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கு இடையேயான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவராகப் பணிபுரிந்தேன். 

ஏற்கெனவே நிறைய அனுபவம் உண்டு என்பதால், என்னிடம் பதற்றம் ஏதும் இல்லை. சீனாவில் நடைபெற்ற 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டது எனது வாழ்வில் முக்கியமான நாட்கள். ஐந்து ஆண்கள் போட்டிகள், இரண்டு பெண்கள் போட்டிகள் என மொத்தம் ஏழு ஆட்டங்களுக்கு நான் நடுவர். இந்தியா பங்குபெறும் போட்டிகளில் மட்டும் நான் நடுவராகச் செயல்படக் கூடாது. பெண்கள் அணியின் இறுதிப் போட்டி சீனாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் சீனா ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நுணுக்கத்திலும் ஒழுக்கத்திலும் சீனா அணி மிகச் சிறப்பானது. நடுவராகச் செயல்பட, கட்டுப்பாடான உணவும் சீரான உடற் பயிற்சியும் முக்கியம். ஒரு போட்டியில், ஆட்டத்தையும் கவனித்துக் கொண்டு சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு ஓடவும் வேண்டும். அதனால், ஒரு விளையாட்டு வீரருக்கு இணையாக உடம்பைப் பராமரிப்பது அவசியம் எனச் சிரிக்கிற ரமேஷ்குமாருக்கு, விரைவில் திருமணம்! 
நன்றி: ஆனந்த விகடன் 

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தமிழ்நாட்டில் நாளை தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.  இந்த பணியில் 11/2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மக்கள் தொகை(சென்சஸ்) கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன்     நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்சஸ்-2011-க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் நாளை (9-ந்தேதி) தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பணிக்காக  தமிழ்நாட்டில் 20 லட்சத்து 47 ஆயிரம் வட்டங்கள் உருவாக்கப்பட்டு 24 கோடி வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.2ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்கள் உள்பட 11/2 லட்சம் பேர் ஈடுபட இருக்கிறார்கள். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் 150 முதல் 200 குடும்பங்களில் மக்கள்தொகையை கணக்கெடுப்பார்கள். ஒரே கால கட்டத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர், சாதி, பிறந்ததேதி, வயது, தாய்மொழி, திருமணத்தின்போது வயது, மதம், ஷெட்யூல் வகுப்பு, எழுத்தறிவு நிலை, கல்வி நிறுவனங்கள் செல்பவர்களின் எண்ணிக்கை, தெரிந்த மொழிகள், மாற்றுத்திறனாளியா?அதிக பட்சம் படித்தது உள்பட 29 வகையான தகவல்கள் திரட்டப்பட இருக்கிறது.

இந்த கணக்கெடுப்பு பணி சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுக்க 150 நகராட்சிகளில் ஆணையாளர்கள் கணக்கெடுப்பு பணிக்கான பொறுப்பாளராக செயல்படுவார்கள், மற்ற இடங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெற இருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்ட பணி கடந்த ஆண்டு ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெற்றது. அப்போது வீட்டுப்பட்டியல்கள், வீடுகள் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டது. இதில், எங்கெங்கு மக்கள் வசிக்கின்றனர்? எவ்வளவு வீடுகள் உள்ளன?. மின்சார வசதி, குடிநீர் வசதி முதலியவை கணக்கிடப்பட்டன. அதனடிப்படையில்  நடைபெற இருக்கும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு காலநீட்டிப்பு இல்லை.

ஒரு படிவம் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு பயன்படுத்தப்படும்.   அதற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், கூடுதல் படிவம் பயன்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு பணி நடைபெறும்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு நாட்களாக உள்ளனர், எங்கிருந்து வந்தனர் போன்ற விவரங்கள் கேட்கப்படும். குடும்பத்தில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வெளியூரில் இருந்தால், அவரதுபெயர் சேர்க்கப்படமாட்டாது.  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெறப்படும் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். எனவே தயக்கமில்லாமல் அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கணக்கெடுப்பு பணிக்கு பெரும்பாலும், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், அவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டை உள்ள நபர்களிடம் மட்டுமே பொதுமக்கள் தகவல் தர வேண்டும்.

கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களிடம் பொதுமக்கள் முழுமையான  ஒத்துழைப்பு தந்து  தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர மறுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கணக்கெடுப்பின் இறுதி நாளான பிப்ரவரி 28-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபாதையில் வசிப்பவர்கள் மற்றும் வீடற்றவர்கள் குறித்த கணக்கெடுக்கப்படும். மேற்கண்ட தகவல்களை  இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறினார் நன்றி: இந்நேரம்.காம்
.http://www.inneram.com/2011020813437/senses-starts-in-tamilnadu?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+inneram+%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%29

வெளியூர் மரண அறிவிப்பு

நமதூர் பெரியப்பள்ளிவாசல் தெரு பாப்பு ஹஜ்ரத் அவர்களின் மகளும் அப்துல் மாலிக், முஹம்மது மன்சூர், முஹம்மது அத்ஹர் ஆகியோரின் சகோதரியும் ஆகிய பல்கீஸம்மா அவர்கள் இன்று 02-09-2010 வியாழக்கிழமை காலை வழுத்தூரில் இறையடிசேர்ந்தார்கள். இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கண்ணாடி பாப்பு அவர்கள் வஃபாத்

நமதூர் மெயின்ரோடு ஹலிகுல் ஜமால், முஹம்மது இஸ்மாயீல் , ஷாஜஹான் ஆகியோரின் தந்தையும் கண்ணாடி பாப்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று 01-09-2010 புதன் அதிகாலை இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஹக்கில் துஆச் செய்யுங்கள்

கண்ணா: வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D

கண்ணா: வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D

tntj July-4 Misra

அல்ஹாஜ் முஹம்மது கனி அவர்கள் வஃபாத்

நமதூர் மெயின் ரோட்டில் வசிக்கும் அப்துல் மூமின், அப்துல் ஹக்கீம், அப்துல் ஜமீல் ஆகியோரின் தந்தை 'லெப்பை' அல்ஹாஜ்  முஹம்மது கனி அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அவர்களின் பாவங்களை  அல்லாஹ் மன்னித்து சுவனபதியில் சேர்த்து வைப்பானாக.
                                   தொடர்புக்கு. அப்துல் ஜமீல்-9940757023