நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com
3G சேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3G சேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தஞ்சை மாவட்டத்தில் 3G சேவை தொடக்கம்


மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் எனப்படும் 3G தொலைதொடர்புசேவை தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த BSNL வாடிக்கையாளர்களுக்கு நேற்று (31ம் தேதி) முதல் வழங்கப்பட்டன.

இதன்தொடக்க விழா நேற்று தஞ்சாவூரில் நடந்தது. துணை பொது மேலாளர் இருதயராஜ் வரவேற்றார். தஞ்சை தொலைதொடர்பு மாவட்ட பொது மேலாளர் ராஜாரெட்டி 3G சிம்கார்டின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவக் கழக தஞ்சைகிளை தலைவர் சிங்காரவேலு பெற்றுக்கொண்டார்.


தஞ்சை தொலை தொடர்பு மாவட்டத்தில் ஏற்கனவே 2G சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3G சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.