மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் எனப்படும் 3G தொலைதொடர்புசேவை தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த BSNL வாடிக்கையாளர்களுக்கு நேற்று (31ம் தேதி) முதல் வழங்கப்பட்டன.
இதன்தொடக்க விழா நேற்று தஞ்சாவூரில் நடந்தது. துணை பொது மேலாளர் இருதயராஜ் வரவேற்றார். தஞ்சை தொலைதொடர்பு மாவட்ட பொது மேலாளர் ராஜாரெட்டி 3G சிம்கார்டின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவக் கழக தஞ்சைகிளை தலைவர் சிங்காரவேலு பெற்றுக்கொண்டார்.
தஞ்சை தொலை தொடர்பு மாவட்டத்தில் ஏற்கனவே 2G சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3G சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.