நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் மின் விநியோக நேரத்தில் மாற்றம்

  ​ தஞ்சாவூர்,​​ கும்பகோணம்,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு,​​ பேராவூரணி,​​ அதிராம்பட்டினம்,​​ பாபநாசம்,​​ திருக்காட்டுப்பள்ளி,​​ மதுக்கூர் ஆகியப் பகுதிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மின் விநியோக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.​ தங்கராஜு. ​ ​ 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ​ ​ கும்பகோணம் பகுதி:​ மேலக்காவிரி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ 

மகாமகம்,​​ டி.எஸ்.ஆர்.​ பாபநாசம்,​​ ஆடுதுறை பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ 

அய்யம்பேட்டை பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ 

கும்பகோணத்தில் காந்திநகர்,​​ சுந்தரபெருமாள் கோயில்,​​ வாட்டர் ஒர்க்ஸ்,​​ திருபுவனம் பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை,​​ 

பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ 

அதிராம்பட்டினம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ 

பேராவூரணி பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ 

மதுக்கூர் பகுதியில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

​ தஞ்சாவூர்:​ திருவையாறு மற்றும் செங்கிப்பட்டி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ 

அன்னை சத்யா விளையாட்டு மைதானம்,​​ சுற்றுலா மாளிகை,​​ திருக்கானூர்பட்டி பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ 

வல்லம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ 

பூக்குளம் பகுதியில் பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை,​​ 

விளார்,​​ முனிசிபல்,​​ இண்டஸ்டிரியல் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை,​​ 

கரந்தை,​​ வ.உ.சி.​ நகர்,​​ கீழவாசல்,​​ வண்டிக்காரத் தெரு பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக