நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

முஸ்லிம் சகோதர்களுக்கு

தமிழக அரசு ஆட்டோ கடன் திட்டம்
இஸ்லாமிய இளைஞர்களுக்கு
இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி வருகின்றது. இத்திட்டத்தில் பயன்பெறுபவர் இஸ்லாமிய இளைஞராக இருக்க வேண்டும். ஆட்டோ வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவரின் குடும்ப ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ800 தொகையை பங்கு முலதனமாக ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும். 2 ஆட்டோ ஒட்டுநரின் பினையம் மற்றும் சொத்து ஜாமின் வழங்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்கி தொழில் செய்வதற்கு கடன் உதவி அளிக்கின்றது.
நமது இஸ்லாமிய இளைஞர்கள் இக்கடனை பெற பின்வரும் அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலான்மை இயக்குனர்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக் கழகம்.
807 அண்ணா சாலை 5வது தளம்,
சென்னை-2
தொலைபேசி: 28514846 நிகரி: 28515450

அனைத்து மாவட்ட பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் மேலாளர், தமிழ்நாடு கூட்டறவு வங்கி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்.
குறிப்பு-
மேற்கண்ட செய்தி எனக்கு மின்மடலாக கிடைத்தது இந்த இஸ்லாமியர்களுக்கான ஆட்டோ கடன் திட்டத்தில் பெறக்கூடிய தொகைக்கு வட்டி கட்டவேண்டுமா அல்லது வட்டியில்லாத கடன் திட்டமா என்பது தெரியவில்லை எனவே சகோதரர்கள் முறையாக விசாரித்து ” ”வட்டியில்லாத சலுகைக்கடன் திட்டமாக இருந்தால் வாய்ப்பை நலுவவிடாதீர்கள்!” ”

0 comments:

கருத்துரையிடுக